Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இறுதி தீர்மானம்



மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் 28ஆம் திகதி கூடவுள்ளது.

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் மின் கட்டணத்தை குறைக்கும் யோசனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த திருத்தத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments