Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

இருளில் மூழ்கிய இலங்கை! மீண்டும் மின்சாரம் வழமைக்கு திரும்புவது தொடர்பில் சற்றுமுன்னர் வெளிவந்த அறிவித்தல்


 நாடளாவிய ரீதியில் தடைப்பட்டுள்ள மின்விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர இன்னும் 2 மணித்தியாலங்கள் செல்லலாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

தேசிய மின் கட்டமைப்பின் பிரதான மின் வழங்கல் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த தடை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை சரிசெய்து மின்சார விநியோகத்தை விரைவாக மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அத்துடன் தற்போது பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இன்று(09) மாலை திடீரென  மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

திடீர் மின் தடை காரணமாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டமைப்பில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

அத்துடன் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை நிவர்த்தி செய்ய இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது.

No comments